Latest News
Home / இலங்கை / சிறுவர்கள் மத்தியில் பரவும் நோய்!

சிறுவர்கள் மத்தியில் பரவும் நோய்!

சிறுவர்கள் மத்தியில் ஒருவகை நோய் பரவி வருவதை காண முடிவதாக சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

´எண்டி புட்டி மவுத் டிசிஸ்´ என அறியப்படும் இந்த நோய், 6 மாதம் முதல் 5 வயது சிறுவர்களுக்கு ஏற்படக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.

காய்ச்சல், உடல் வலி, கைகள், கால்கள் மற்றும் வாயில் சிவப்பு புள்ளிகள் ஏற்படல் ஆகியன இந்த நோயின் ஆரம்ப அறிகுறிகளாகும்.

இது ஒரு பிள்ளையிடம் இருந்து மற்றுமொரு பிள்ளைக்கு தொற்ற கூடியது என வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

´கொவிட் தொற்று உள்ளிட்ட தொற்று நோய்களால் பிள்ளைகள் பீடிக்கப்படுகின்றனர். டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் வகைகள் ஏற்படுவதை நாம் காண்கின்றோம். இப்படியிருக்க ´எண்டி புட்டி மவுத் டிசிஸ்´ என அறியப்படும் நோயும் பிள்ளைகள் மத்தியில் பரவிவருகின்றது´.

Check Also

பட்டிருப்பு வலய பாடசாலைக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய இணைந்த கரங்கள் அமைப்பு…

இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள வக்கியெல்லை மட் /பட் /விளாந்தோட்டம் அரசினர் தமிழ் கலவன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *