தேசிய இளைஞர் சேவை மன்றத்தினால் மாவட்ட மட்டத்தில் நடாத்தப்பட்ட கரம் (Carrom) போட்டிகளில் கமு/திகோ/கோளாவில் விநாயகர் மகா வித்தியாலயம் சார்பாக கலந்துகொண்ட செல்வி.K.ஜெனிற்றா, செல்வி.V.டில்ருக்சனி ஆகியோர் பெண்களுக்கான இரட்டையர் கரம் போட்டியில் முதலாம் இடத்தினையும், செல்வன்.M.மதுர்ஜன் அவர்கள் ஆண்களுக்கான ஒற்றையர் கரம் போட்டியில் இரண்டாம் இடத்தினையும் பெற்று தேசிய மட்டப் போட்டிகளில் பங்குபற்ற தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கரம் சுற்றுப்போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவ – மாணவிகளுக்கும், பயிற்றுவித்த பயிற்றுவிப்பாளருக்கும் மேலும் சகல விதங்களிலும் உத்துழைப்புக்களை ஏற்படுத்திக்கொடுத்த பாடசாலையின் அதிபர் திரு.M.சன்டேஸ்வரன் அவர்களுக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றேம்.#