Latest News
Home / விளையாட்டு / ஐ.பி.எல்.: இரண்டாவது வெற்றிக்காக மும்பை- பஞ்சாப் மோதல்!

ஐ.பி.எல்.: இரண்டாவது வெற்றிக்காக மும்பை- பஞ்சாப் மோதல்!

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 13ஆவது லீக் போட்டியில், நடப்பு சம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

அபுதாபியில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ள இப்போட்டியில், மும்பை அணிக்கு ரோஹித் சர்மாவும், பஞ்சாப் அணிக்கு கே.எல். ராகுலும் தலைமை தாங்கவுள்ளனர்.

ஏற்கனவே இரு அணிகளும் மூன்று போட்டிகளில் விளையாடி ஒன்றில் வெற்றி, இரண்டில் தோல்விகளை சந்தித்துள்ளன.

இந்தநிலையில் இரண்டாவது வெற்றியை பெறும் ஆர்வத்தில் இரு அணிகளும் இன்று களம் காணவுள்ளன.

இதுவரை இரு அணிகளும் தலா 24 முறை மோதியுள்ளன. இதில் 13முறை மும்பை அணியும், 11 முறை பஞ்சாப் அணியும் வெற்றிபெற்றுள்ளன.

Check Also

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் : இலங்கைக்கு 180,000 அமெரிக்க டொலர் பரிசு !

ஆடவருக்கான 13வது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நிறைவு பெற்றுள்ள நிலையில் குழு நிலை போட்டியில் பெற்றுக்கொண்ட ஒவ்வொரு வெற்றிக்கும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *