கொரோனா தொற்றினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்கில் நாடளாவிய ரீதியில் பொலிசார் இராணுவத்தினர் இணைந்து ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.
இன் நிலையில் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேசங்களில் அத்தியாவசிய தேவைகளை தவிர வெளியில் யாரும் நடமாட முடியாதவாறு பொலிசார் மற்றும் இராணுவத்தினர் தமது பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
எவ் நிலையிலும் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கும் வகையிலான நடவடிக்கைகளை மாவட்ட செயலகம் பிரதேச செயலகங்கள் ஊடாக முன்னெடுத்து வருகின்றது.
இது இவ்வாறிருக்க கிராமங்களில் வியாபார நடவடிக்கையில் ஈடுபடுகின்றவர்கள் அனுமதி பெற்றுள்ளார்களா என்பது தொடர்பில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் பரிசோதனை நடவடிக்கையினை முன்னெடுத்ததையும் அவதானிக்க முடிகின்றது.