உகந்தைமலை ஸ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த ஆடிவேல் மகோற்சவ திருவிழா இன்று (10) சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
குறித்த ஆடிவேல் மகோற்சவ கொடியேற்ற நிகழ்வு உற்சவத்தில் குருமார் உள்ளிட்ட 30 நபர்களுக்கு மாத்திரமே கலந்துகொள்ள நாட்டில் நிலவும் கொரோனா தொற்று காரணமாக சுகாதார துறையினரால் அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.
மேலும் 25ம் திகதி சமுத்திர தீர்த்தோற்சவம் நடைபெற்று அன்று மாலை கொடியிறக்கம், திருக்கல்யாணம், திருப்பொன்னூஞ்சல் மற்றும் மறுநாள் வைரவர் பூஜை நிகழ்வுகளுடன் ஆடிவேல் மகோற்சவ திருவிழா நிறைவுறவுள்ளது.
இதே நேரம் கொரோனா அச்ச நிலை காரணமாக மக்களது பாதுகப்பை முன்னிறுத்தி எக்காரணத்தை கொண்டும் எந்தவொரு பக்தருக்கும் ஆலயத்திற்குள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்படாது என ஆலய உற்சவம் தொடர்பில் இடம்பெற்ற உயர் மட்ட அரச திணைக்களங்களின் தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டு இருந்தது.
மேலும் ஆலய உற்சவம் தொடர்பில் இடம்பெற்ற உயர் மட்ட அரச திணைக்களங்களின் தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் உகந்தை முருகன் ஆலய உற்சவம் கதிர்காம உற்சவத்தோடும் பாதயாத்திரையோடும் தொடர்புபட்டுள்ள நிலையில் இம்முறை யாழ்ப்பாணம் தொடக்கம் இலங்கையின் எந்தவொரு பாகத்திலிருந்தும் யாத்திரிகர்கள் வருகை தர அனுமதி
மறுக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டதுவும் குறிப்பிடத்தக்கது.