இணைந்த கரங்கள் அமைப்பினால் மட்/கமு/கட்டு முறிவுக்குளம் அ.த.க பாடசாலையில் கல்விகற்கும் 163 மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு நேற்று (12/11/2022) காலை 11.30 மணியளவில் பாடசாலையின் ஆசிரியர் எஸ். சத்தியசீலன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
வாகரை பிரதேசத்தின் பிரதான பாதையில் இருந்து காட்டுப்பாதையில் உள்ளே 20km தொலைவில் உள்ள பாடசாலைக்கு தினமும் சென்று ஆசிரியர்கள் சிரமப்பட்டு கல்வி கற்றுக் கொடுத்துவருகின்றனர்.
நாளாந்தம் ஒரு தடவையே இப் பிரதேசத்திற்கு பேருந்து வந்து செல்கின்றது அதே வேளை வருகின்ற பாதையும் வாகனம் செல்ல முடியாத நிலையில் காணப்படுவதுடன் இக் கிராமத்தில் மக்களின் பிரதான தொழில் விவசாயம் மற்றும் கூலித்தொழிலையே நாளாந்தம் நம்பி வாழ்கின்றனர்.
அங்கே கல்வி கற்கும் மாணவர்களுக்கு பிரத்தியோக வகுப்புகள் கூட இடம்பெறுவதில்லை இருந்த போதிலும் மாணவர்களுக்கு பாடசாலை ஆசிரியர்கள் மூலம் பிரத்தியோக வகுப்புகள் மட்டுமே பாடசாலையின் ஆசிரியர்களினால் நடார்த்தப்படுகிறது.
மேலும் கற்றல் உபகரணம் வழங்கும் இன் நிகழ்வில் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் திரு.வி.லிங்கேஸ்வரன், பல்கலைக்கழக மாணவிகள், பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள்,இணைந்த கரங்கள் உறுப்பினர்களான திரு.லோ.கஜரூபன், திரு. எஸ்.காந்தன், திரு.கி.சங்கீத், திரு.சி.தனோஜன், திரு.சி.துலக்சன், மா.ஜெகனாதன் திரு.நா.சனாதனன் ஆகியோர் கலந்து கொண்டு இணைந்த கரங்கள் அமைப்பினரால் மட்/கமு/கட்டு முறிவுக்குளம் அ.த.க பாடசாலையில் கல்விகற்கும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கி வைக்கப்பட்டது.
இப்பணிக்கு முழுதான நிதிப் பங்களிப்பை இணைந்த கரங்கள் மற்றும் திரு.தர்சன் சௌந்தராஜன்,மற்றும் திரு.அழகரெட்ணம், ஆகியோரும் வழங்கியுள்ளனர். இப்பணி இடை விடாது அவர்களது பயணத்தின் நோக்கத்தையும் மாணவச் செல்வங்களின் வலியையும் உணர்ந்து இணைந்த கரங்கள் அமைப்பின் உறுப்பினர்களும் இணைந்து உதவி வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.