பசுமை மீட்சிப் போராட்டம் எனும் தலைப்பில் விழிப்புணர்வு பிரச்சாரங்களை பசுமை மீட்சி மற்றும் சூழல் மாற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடுகளை சது/அல்/அர்சத் மகா வித்தியாலயத்தின் மாணவியான செல்வி J.பாத்திமா மின்ஹா (மின்மினி மின்ஹா) மேற்கொண்டு வருகின்ற நிலையில்.
ஆலையடிவேம்பு கல்விக்கோட்ட பாடசாலைகளான அக்கரைப்பற்று, கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி (தேசிய பாடசாலை), க்கரைப்பற்று அன்னை சாரதா கலவன் பாடசாலை, திருநாவுக்கரசு வித்தியாலயம் ,கண்ணகி வித்தியாலயம் மற்றும் புனித சவேரியார் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் நேற்றய தினம் (03) மேற்படி விழிப்புணர்வு பிரச்சாரம் சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட்டது.
மேலும் இன்றைய தினம் ஆலையடிவேம்பு கல்விக்கோட்டத்தின் மீதமுள்ள பாடசாலைகளுக்கான பசுமை மீட்சிப் போராட்டம் விழிப்புணர்வு பிரச்சாரம் முன்னெடுக்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.