வை.ஜினுஜன்
அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்றில் பன்னெடுங்காலமாக குடிகொண்டு அடியார்களுக்கு இஷ்ட சித்திகளை வழங்கி அருள் பாலித்து வரும் அனவ்ரத நாயகன் ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலய வருடார்ந்த மகோற்சவப் பெருவிழா நிகழும் மங்கல சார்வரி வருடம் ஆனித் திங்கள் 11ம் நாள் 25,06,2020 வியாழக்கிழமை திருக்கொடியேற்றல் நிகழ்வுடன் ஆரம்பமாகியது.
இதனை தொடர்ந்து , இன்று மூன்றாம் நாள் திருவிழா, திரு. கந்தையாபிள்ளை நவரெத்தினராசா அவர்களினால் இன்றய பூஜை இனிதே நடாத்தப்பட்டது.
பூஜையின் போது பக்தர்களினால் சமூக இடைவெளி பேணப்பட்டது குறிப்பிடத்தக்க விடையம்.