-காந்தன்-
தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு “அறிவார்ந்த சமூகத்திற்கான வாசிப்பு” எனும் தொனிப்பொருளின் கீழ் கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் இன்று (19/10/2022) புதன்கிழமை காலை 10.30 மணியளவில் பாடசாலை அதிபர் மற்றும் பிரதிஅதிபர் தலைமையில் பாடசாலை நூலக பொறுப்பாளர்களான S. A.C.M. றமின், திரு.சி.சிறிக்காந்தன், திருமதி.கோ.கிரியாழினி ஆகியோரின் ஏற்பாட்டிலும் நூலகத்தில் தரம் 06 தொடக்கம் 09 வரையான வகுப்பு மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகள் நடைபெற்றது.
இப் போட்டிகளுக்கு திருமதி.T.பிரியதர்சினி, திரு. N.றேகன் ஆசிரியர்கள் நடுவர்களாக கடமையில் ஈடுபட்டிருந்தர் மேலும் இன் நிகழ்வுகளுக்கு அக்கரைப்பற்று “செலான்” வங்கி அனுசரனை வழங்கிருந்தமை குறிப்பிடத்தக்கது.