Latest News
Home / இலங்கை / பெப்ரவரி தொடக்கம் 10 அத்தியாவசிய பொருட்களுக்கு நிலையான விலை

பெப்ரவரி தொடக்கம் 10 அத்தியாவசிய பொருட்களுக்கு நிலையான விலை

பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் 10 அத்தியாவசிய பொருட்களின் விலையை நிலையானதாக முன்னெடுப்பதற்கு வர்த்தக அமைச்சு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பாக வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன கருத்து தெரிவிக்கையில் 6 மாத காலத்திற்கு விஸ்திர விலையை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது என்று தெரிவித்தார்.

இந்த பொருட்களின் விலையை 6 மாதங்களுக்கு நிலையானதாக முன்னெடுப்பதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம்.

புதிதாக வரி விதிக்கப்பட்டால் அல்லது வெளிநாட்டு நாணயத்தில் மாற்றம் ஏற்பட்டால் இந்த பொருட்களின் விலையில் மாற்றம் ஏற்படலாம் என்றும் குறிப்பிட்டார்.

உள்ளூர் உற்பத்தியாளர்கள் மற்றும் நேரடியான முதலீட்டாளர்களிடம் இருந்து நாம் இது குறித்த ஆலோசனைகளை பெறவுள்ளோம். 22 ஆம் திகதி வரைக்கு இது குறித்த ஆலோசனைகளை சமர்ப்பிக்க முடியும்.

சர்வதேச சந்தைக்கு அமைவாக இந்த பொருட்களைப் பெற்றுக்கொண்டு அதாவது சத்தோச மற்றும் கூட்டுறவு வர்த்தக செயற்பாடுகள் மூலம் இவற்றை கொள்வனவு செய்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

சதோச கூட்டுறவு சங்கங்கள் மூலம் இந்த பொருட்களை கொண்டு வந்து இவற்றின் விலையை குறைக்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Check Also

பட்டிருப்பு வலய பாடசாலைக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய இணைந்த கரங்கள் அமைப்பு…

இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள வக்கியெல்லை மட் /பட் /விளாந்தோட்டம் அரசினர் தமிழ் கலவன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *