Latest News
Home / இலங்கை / இலங்கை மக்களுக்கு மின்சார சபை விடுத்துள்ள மகிழ்ச்சியான செய்தி!

இலங்கை மக்களுக்கு மின்சார சபை விடுத்துள்ள மகிழ்ச்சியான செய்தி!

இலங்கை முழுவதுமுள்ள அனைத்து மின்சார பாவனையாளர்களுக்கும் 3 பில்லியன் ரூபா சலுகை வழங்குவதற்கு இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, மார்ச், ஏப்ரல் மற்றும் மே ஆகிய மாதங்களில் நுகர்வுக்கு உட்படுத்திய மின்சார பாவனைக்கே இவ்வாறு சலுகை வழங்கப்பட உள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, 67 இலட்சம் மின் பாவனையாளர்களுக்கு இந்த சலுகை வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரொனா வைரஸ் பரம்பல் தீவிரம் அடைந்த நிலையில், மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நாடு முழுமையாக முடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Check Also

பட்டிருப்பு வலய பாடசாலைக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய இணைந்த கரங்கள் அமைப்பு…

இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள வக்கியெல்லை மட் /பட் /விளாந்தோட்டம் அரசினர் தமிழ் கலவன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *