கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ள நிலையில் அமெரிக்காவில் தொடர்ந்தும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புக்கள் ஏற்பட்டு வருகின்றன. இன்று ஈஸ்ரர் பண்டிகை நாள் என்றநிலையில் உலக நாடுகளில் கிறிஸ்தவர்கள் பண்டிகையை வீட்டுக்குள்ளேயே இருந்து கொண்டாடி வருகின்றனர். இவ்வாறிருக்க, இத்தாலியில் ஏற்பட்ட மரணங்களை விட இப்போது அமெரிக்காவில் அதிக மரணம் ஏற்பட்டு உலக அளவில் மரணித்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்துக்கு வந்துள்ளது. அந்தவகையில் இத்தாலியில் 19 ஆயிரத்து 468 ஆக மரணங்கள் பதிவாகியுள்ளதுடன் …
மேலும் வாசிக்கஜாஎல – சுதுவெல்ல பிரதேசத்தில்கைது செய்த 28 நபர்கள் ஒலுவில் பகுதியில் கடற்படை அமைந்துள்ள மத்திய நிலையத்துக்கு மாற்றம்
ஜாஎல – சுதுவெல்ல பகுதியில் சுயதனிமைக்குட்பட மறுப்பு தெரிவித்த நபர்கள் 28 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 6 பேர் ஜாஎல – சுதுவெல்ல பகுதியில் அடையாளம் காணப்பட்டதை அடுத்து குறித்த பகுதிக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தொற்றுக்குள்ளான பல நபர்கள் மதுவுக்கு அடிமையானவர்கள் என்பதால் அவர்கள் பெரும்பாலானோருடன் தொடர்புபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மதுவுக்கு அடிமையானவர்கள் என்பதால் அவர்களை கட்டுப்படுத்துவது கடினம். முதலாம் நபரின் மனைவிக்கும் 7 …
மேலும் வாசிக்க19 மாவட்டங்களுக்கான ஊரடங்கு உத்தரவு நீடிப்பு….
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் தவிர்த்து நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 16 வியாழக்கிழமை காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு அதே நாளில் மாலை 4 மணிக்கு மீண்டும் அமுலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு, யாழ்ப்பாணம், புத்தளம், களுத்துறை, கண்டி, மற்றும் கம்பஹா மாவட்டங்களில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை …
மேலும் வாசிக்கஇரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் மே 11 ஆரம்பம்
2020 ஆம் ஆண்டிற்கான இரண்டாம் தவணை மே மாதம் 11 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஏப்ரல் 20 ஆம் திகதி ஆரம்பமாக திட்டமிடப்பட்டிருந்த இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கையே மாற்றப்பட்டுள்ளது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
மேலும் வாசிக்ககொரோனாவை கட்டுப்படுத்துவதில் வெற்றி அடைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை…..!
கொரோனா வைரஸ் தொற்றுநோயை கட்டுப்படுத்துவதில் வெற்றிகண்டுவரும் நாடுகளில் இலங்கை மற்றும் சீனா முன்னணியில் உள்ளதாகவும் இலங்கையின் சுகாதார கட்டமைப்பு மற்றும் முன்னாயத்த ஏற்பாடுகள் மிக சிறப்பானதாக அமைந்துள்ளதாகவும் சர்வதேச கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன. கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் உலக அளவில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்ற நிலையில் பிரித்தானிய ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கலக்கம் மற்றும் பிரித்தானிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் ஆகியன இணைந்து முன்னெடுத்துள்ள ஆய்வொன்றின் அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த …
மேலும் வாசிக்கஅகில இலங்கை இந்துமாமன்றத்தின் நிதி அனுசரணையுடன் நிவாரணப்பணிகள்
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் இடம்பெறுகின்ற நிவாரணப்பணிகளில் இந்து அமைப்புக்களும் இணைந்துள்ளன. இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றமும் நிவாரணப்பணிகளை ஆரம்பித்துள்ளது. இதன் இரண்டாம் கட்டமாக அகில இலங்கை இந்துமாமன்றத்தின் நிதி அனுசரணையுடன் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கோளாவில்-03 மற்றும் அக்கரைப்பற்று-08 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்குட்பட்ட 60 குடும்பங்களுக்கு உலர் உணவுபொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. மன்றத்தின் தலைவர் சி.கனகரெத்தினத் தலைமையில் இடம்பெற்ற நிவாரணப்பணிகளில் கிராம உத்தியோகத்தர்கள் …
மேலும் வாசிக்ககொரோனா அச்சம் காரணமாக ஆலையடிவேம்பு பிரதேச சபையினால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம்
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்றில் இனங்காணப்பட்ட முதலாவது கொரோனா தொற்றுடையவரின் உறுதிப்படுத்தலின் பின்னர் ஆலையடிவேம்பு பிரதேச சபை மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் பிரதேச சபை மண்டபத்தில் இன்று நடைபெற்றது. பிரதேச சபையின் தவிசாளர் க.பேரின்பராசா தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன் மற்றும் ஆலையடிவேம்பு வர்த்தகர் சங்க தலைவர் ஆர்.ஜெகநாதன் கலந்து கொண்டதுடன் பிரதேச சபை உறுப்பினர்கள் …
மேலும் வாசிக்ககல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட பிரதேசங்களில் 750 தனிமைப்படுத்தல் நபர்கள் உட்பட அவர்களின் குடும்பம் சார்ந்த 2000 இற்கும் அதிகமானவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்…
வி.சுகிர்தகுமார் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட பிரதேசங்களில் தற்போதைய நிலையில் 750 தனிமைப்படுத்தல் நபர்கள் உட்பட அவர்களின் குடும்பம் சார்ந்த 2000 இற்கும் அதிகமானவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கே.சுகுணன் தெரிவித்தார். அக்கரைப்பற்றில் இடம்பெற்ற அம்பாரை மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனான விசேட சந்திப்பொன்றின் பின்னர் கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு கூறினார். இதேநேரம் அம்பாரை மாவட்டத்தில் இதுவரையில் கொரோனா தொற்றுள்ள யாரும் …
மேலும் வாசிக்கஐயையோ திருமணமா?: இதற்குச் சிறையே பரவாயில்லை என முடிவெடுத்த இளைஞன்!
பிடிக்காத திருமணத்திற்குப் பயந்து சாமியாராகிப் போனவர்களை நாம் நிஜ வாழ்விலும் கதைகளிலும் சினிமாக்களிலும் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் சீனாவில் விநோத பயம் ஆட்கொள்ள, திருமணத்தை வெறுத்து சிறையே பரவாயில்லை என்று திருட்டில் ஈடுபட்டு ஒருவர் சிறைக்குச் சென்றுள்ள சம்பவம் நடந்துள்ளது. திருமணம் செய்துகொள்ள வற்புறுத்திய காதலியிடம் இருந்து தப்பிக்க வேண்டுமென்றே திருடிவிட்டு இளைஞன் சிறைக்குச் சென்றுள்ளார். சீனாவைச் சேர்ந்த இளைஞர் சென் என்பவர் பெண் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் தன்னை …
மேலும் வாசிக்ககனடாவில் இலங்கைத்தமிழர் ஒருவர் அடித்து கொலை…
கனடாவில் ஸ்காபுரோவில் Finch Avenue East And Bridletowne Circle பகுதியில் நேற்றுமுன்தினம் நிகழ்ந்த தாக்குதலில் கொல்லப்பட்ட நபர் இலங்கை தமிழர் என ரொரண்ரோ பொலிஸார் உறுதிசெய்துள்ளனர். இரண்டு நபர்களின் கடுமையான தாக்குதலில் 58 வயதான கமலக்கண்ணன் அரசரட்ணம் உயிர் இழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த ஞயிற்றுக்கிழமை 3.40 மணியளவில் மோதல் தொடர்பான தகவல் ரொரண்ரோ பொலிஸாருக்கு கிடைக்கபெற்றுள்ளது. உடனடியாக அங்கு சென்ற பொலிஸார் ஆபத்தான நிலையில் …
மேலும் வாசிக்க