ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இடம்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான அரங்கத்தின் நிர்மாண பணிகள் நிறைவடைந்துள்ளன.
ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாக இன்னும் 7 மாதங்கள் உள்ள நிலையில் இந்த பணிகள் நிறைவடைந்துள்ளன.
60 ஆயிரம் பேர் அமரக்கூடிவாறு நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த அரங்கத்திற்காக 1.44 பில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளன.
இந்த அரங்கில் ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஆரம்ப நிகழ்வு, இறுதி நிகழ்வு மற்றும் தடகள போட்டிகளும் இடம்பெறவுள்ளன.
எதிர்வம் 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24 ஆம் திகதி முதல் ஓகஸ்ட் மாதம் 9ஆம் திகதி வரை டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெறவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.