ஜே.கே.யதுர்ஷன்
நீதிபதிகளுக்கான பதவி நியமன திறந்த போட்டிப் பரீட்சையில் சித்தி பெற்று நேர்முக பரீட்சையிலும் தெரிவு செய்யப்பட்டு திருமதி ஜெகநாதன் சுபராஜினி அவர்கள் மிக இள வயதில் நீதிபதியாகின்றார்.
இவர் அம்பாறை திருக்கோவில் பிரதேசத்திலிருந்து தெரிவு செய்யப்பட முதலாவது பெண்நீதிபதி என்பதுடன் இவர் எதிர் வரும் (15) திங்கட்கிழமை நீதிபதியாக சத்தியப்பிரமாணம் எடுக்கவுள்ளார்.
திருமதி ஜெகநாதன் சுபராஜினி அவர்கள் இளம் பெண் நீதிபதியாக தெரிவுசெய்யப்பட்டது எமது பிரதேசத்திற்கு பெருமை சேர்த்து தருவதுடன். திருமதி.ஜெகநாதன் சுபாராஜினி அவர்களுக்கு வாழ்த்துக்கள் பலரும் தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.