அக்கரைப்பற்று, ஸ்ரீ இராமகிருஸ்ணா தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்கத்துடன் அவுஸ்திரேலியா தமிழ் பொறியிலாளர் அமைப்பு இணைந்து ஆலையடிவேம்பு கல்விக்கோட்ட 2024 ஆம் ஆண்டு உயர்தர கணித, விஞ்ஞான பிரிவு மாணவர்களுக்குரிய மேலதிக பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட இருக்கின்ற நிலையில் அதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (06) செவ்வாய்க்கிழமை பாடசாலையின் அதிபர் K.ஜெயந்தன் தலைமையில் பாடசாலையின் ஆராதனை மண்டபத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளரும் பாடசாலை பழைய மாணவ சங்கத்தின் செயலாளருமான வி.பபாகரன், ஆலையடிவேம்பு கோட்டக் கல்விப் பணிப்பாளர் திருமதி.M.மயூரன், பாடசாலையின் பிரதி அதிபர் சி.மதியழகன், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் அகிலன், அவுஸ்திரேலியா தமிழ் பொறியிலாளர் அமைப்பின் பிரதிநிதி, பழைய மாணவ சங்கத்தினர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்ததுடன்.
குறித்த கணித, விஞ்ஞான பிரிவு மாணவர்களுக்குரிய மேலதிக பயிற்சி வகுப்புக்களை நடத்துவதற்கான நிதி பங்களிப்பினை அவுஸ்திரேலியா தமிழ் பொறியிலாளர் அமைப்பு வழங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது.