விநாய சதுர்தி விழா ஹிந்துஸ்வயம் சேவகசங்க ஏற்பாட்டில் ஆலையடிவேம்பில் விபுலானந்தா சிறுவர் இல்லம், மற்றும் சித்தி விநாயகர் அறநெறிப் பாடசாலை மாணவர்கள் பங்கு பற்றலுடன் கடந்த (28) அன்று இடம்பெற்றது.
விபுலானந்தா சிறுவர் இல்லத்தில் இருந்து விநாயகர் ரத ஊர்வலம் ஆரம்பிக்கப்பட்டு சித்தி விநாயகர் ஆலயத்திற்கு சென்று பூஜை வழிபாடினைத்தொடர்ந்து அறநெறிப் பாடசாலை மாணவர்களினால் கதை, பேச்சு என்பன இடம்பெற்றதைத் தொடர்ந்து நற்சிந்தனையும் இடம்பெற்றது மேலும் இன் நிகழ்வில் விபுலானந்தா சிறுவர் இல்ல ஸ்தாபகர் கைலாயபிள்ளை அவர்களும் இந்து ஸ்வயம் சேவக உறுப்பினர் சசிந்திரன் அவர்களும் ஆலையடி வேம்பு இந்து ஸ்வயம் சேவக உறுப்பினர் சரவணபவன், ஆலையடி வேம்பு கலாசார உத்தியோகத்தர், அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.