Latest News
Home / இலங்கை / வானுடன் மோதி மோட்டார் சைக்கிள் விபத்து – ஒருவர் படுகாயம்

வானுடன் மோதி மோட்டார் சைக்கிள் விபத்து – ஒருவர் படுகாயம்

வவுனியா முதலாம் குறுக்குத்தெரு சந்தியில் மோட்டார் சைக்கிளுடன் வான் மோதி விபத்திற்குள்ளாகியதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

வவுனியா முதலாம் குறுக்குத் தெருவால் பயணித்த மோட்டார் சைக்கிள் சூசைபிள்ளையார் குள வீதியால் நகரை நோக்கி பயணித்த வானுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Check Also

பட்டிருப்பு வலய பாடசாலைக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய இணைந்த கரங்கள் அமைப்பு…

இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள வக்கியெல்லை மட் /பட் /விளாந்தோட்டம் அரசினர் தமிழ் கலவன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *