மாகாண ஆளுனர் – சுரேன் ராகவன்.
சிறிய மாவட்டம் – #யாழ்ப்பாணம்.
பெரிய மாவட்டம் – #முல்லைத்தீவு.
கடல்பரப்பில்லாத மாவட்டம் – வவுனியா.
குளங்கள் அதிகமாக காணப்படும் மாவட்டம் – முல்லைத்தீவு.
பெரிய தீவு – #நெடுந்தீவு.
சிலிக்கன் மணல் காணப்படும் இடம் – #நாகர்கோவில், வடமராட்சி கிழக்கு, யாழ்ப்பாணம்.
மாகாணசபை கட்டடத்தொகுதி அமைந்துள்ள இடம் – #கைதடி.
சனத்தொகை அடர்த்தி கூடிய மாவட்டம் – யாழ்ப்பாணம்.
சனத்தொகை அடர்த்தி குறைந்த மாவட்டம் – முல்லைத்தீவு.
பரப்பளவு – 8884 சதுர கிலோமீட்டர்.
நிலப்பரப்பு 8290 சதுர கிலோமீட்டர்.
எண்ணெய் வளம் உள்ள மாவட்டம் – மன்னார்.
சிறுவர் நீதிமன்றம் அமைந்துள்ள இடம் – #குருநகர், யாழ்ப்பாணம்.
வடக்கில் அல்லது இலங்கையில் நீளமான பாலம் – வாணர் பாலம் (வேலணை – புங்குடுதீவு ஆகிய தீவுகளை இணைக்கிறது)
வடக்கில் காணப்படும் தரைத்தோற்ற முனை – பருத்தித்துறை முனை அல்லது பேதுறு முனை.
வடக்கில் காணப்படும் நீரேரிகள் – யாழ்ப்பாண கடநீரேரி (கச்சாய் அல்லது கிளாலி) சுண்டிக்குளம் கடநீரேரி, தொண்டைமானாறு கடநீரேரி, நாவற்குழி
இலங்கையின் வடக்கின் புராதனபெயர் – #நயினாதீவு (நாகதீவு).
வடக்கில் இருந்து பாராளுமன்றம் சென்ற முதலாவது பெண் – 15 February 1989 – 24 June 1994 – திருமதி புலேந்திரன் ராஜமனோகரி – வன்னி.
வடக்கின் ஓட்டு தொழிற்சாலை ஒட்டுசுட்டானில் உள்ளது.
*உப்பளம் ஆனையிறவிலும்
*சீமேந்து தொழிற்சாலை காங்கேசன்துறையிலும்
*இரசாயன தொழிற்சாலை பரந்தனிலும் காணப்படுகின்றன
வட மாகாணத்தில் பாதுகாக்கப்பட்ட பறவைகள் விலங்குகள் காப்பகம் என அறிவிக்கப்ட்ட இடம் – சுண்டிக்குளம் (யாழ்ப்பாணம்-கிளிநொச்சி மாவட்டங்களுக்குரியது)
வேலணை தீவு அல்லது லைடன் தீவுகள் எனப்படுவது வடக்கில் பெரிய கூட்டிணைக்கப்பட்ட தீவாகும்.
யாழ்ப்பாணத்தில் காணப்படும் ஒரேயொரு நன்னீர் ஆறு – வழுக்கை ஆறு (பருவகால ஆறு).
இலங்கையில் காணப்படும் குளங்களில் மூன்றாவது பெரிய குளம் – இரணைமடுக் குளம்.
“செங்கையாழியன்” என அழைக்கப்படும் வடமாகாணத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர் – கலாநிதி க.குணராசா.
அண்மையில் வடக்கில் தொடங்கப்பட்ட கைத்தொழில் பேட்டை – அச்சுவேலி.
வவுனிக்குளத்தை கட்டுவித்தவன் – எல்லாளன்.
பனைமரத்தின் விஞ்ஞான பெயர் – Borassus flabellifer.
வடக்கிற்கான ரயில் சேவை 1989.01.19 பின் 13.10.2014 உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
வடக்கு ரயில் பாதையை புனரமைத்த இந்திய நிறுவனம் – இர்கொன்.
இரணைமடு நீர் விநியோக திட்டத்திற்கு உதவி வழங்குவது – ஆசிய அபிவிருத்தி வங்கி.
இரணமடு நீர் விநியோக திட்டத்திற்கு மாற்றீடான மற்றுமொரு திட்டம் – ஆறுமுகம் திட்டம்.
யாழ்ப்பான பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது – ஆகஸ்ட் 1, 1974
வடமாகாணத்தில் ஒவ்வொரு வருடமும் மரம் நடுகை தினம் நவம்பர் 01 – 30 வரை கொண்டாடப்படுகிறது.
மருத மரத்தின் விஞ்ஞான பெயர் – Terminalia elliptica.
வெண்டாமரை பூவின் விஞ்ஞான பெயர் – Nelumbo nucifera.
ஆண் மானின் விஞ்ஞான பெயர் – Axis axis.
சுன்னாகம் கழிவு ஒயில் தொடர்பான நிறுவனம் – நொதேர்ன் பவெர்.
யாழ்ப்பான நூல்நிலையம் எரிக்கப்பட்ட ஆண்டு – 31.05.1981.
யாழ்ப்பாண வரலாற்றை கூறும் நூல்கள் – வையாபாடல், யாழ் வைபவ மாலை.
யாழ்ப்பான பல்கலைக்கழகத்தை உருவாக்கியவர் – சேர் பொன் இராமநாதன்.
முறிந்த பனை என்ற நூலை எழுதியவர்கள் – ராஜினி திராணகம, ராஜன் ஹூல், சிறிதரன், தயா சோமசுந்தரம்.
மன்னருக்கான ரயில் சேவைகள் 1914ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டாலும் யுத்தத்தின் பின்னர் ஆரம்பிக்கப்பட்டது – 14.03.2015.
நாவற்குழி– மன்னார் நெடுஞ்சாலையின் குறியீடு A32.
பரந்தன் – முல்லைத்தீவு நெடுஞ்சாலையின் குறியீடு A35.
மாங்குளம் – முல்லைத்தீவு நெடுஞ்சாலையின் குறியீடு A34.
யாழ்ப்பாணம்-கண்டி நெடுஞ்சாலையின் குறியீடு A9
இலங்கையின் மிக நீளமான நெடுஞ்சாலை- A9
அது ஊடறுக்கும் வடக்கின் மாவட்டங்கள் – யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா
முல்லைத்தீவோடு இணைக்கப்பட்ட பிரதேசம் – மணலாறு (வெலிஓயா).
நயினாதீவின் சிங்களப்பெயர் பெயர் – நாகதீப.
யாழ் நூலகம் ஆரம்பிக்கப்பட்டது – 1933 ஆம் ஆண்டு.
இலங்கையில் வறுமை கூடிய மாவட்டம் -கிளிநொச்சி.
மதுபான விற்பனை மற்றும் எய்ட்ஸ் பாதிப்பு அதிகரித்து காணப்படும் மாவட்டம் – யாழ்ப்பாணம்
யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து 1984 பெப்ரவரியில் கிளிநொச்சி மாவட்டம் பிரிக்கப்பட்டது.
யாழ் கோட்டை போர்த்துகேயரால் 1625ல் கட்டப்பட்டது.
தற்போது காணப்படும் யாழ் கோட்டை ஒல்லாந்தரால் உடைக்கப்பட்டு 1658 யூன் 23 ற்கு பின் கட்டப்பட்டதாகும்.
யாழ்ப்பாண அரசின் நாணயம் – சேது நாணயம்.
யாழ்ப்பாண அரசின் பழைய சின்னமாக விளங்குவது – நந்தி.
வன்னி இராட்சியம் வீழ்ச்சியடைந்தது – 1803ம் ஆண்டு.
ஒல்லாந்தரால் சொத்துரிமை தொடர்பாக யாழ்ப்பாணத்துக்கு மட்டும் உரித்தான சட்டம் – தேசவழமைச் சட்டம்.
யாழ் நூலை எழுதியவர் – சுவாமி விபுலானந்தர் 1947.
சுவாமி விபுலானந்தர் இயற்பெயர் – மயில்வாகனன் 1892.
சைவசமய மறுமலர்ச்சிக்கு வித்திட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் – ஆறுமுகநாவலர் (1822 டிசம்பர் 18 ஆறுமுகம்பிள்ளை).
நாவலர் 1872 இல் முதல் உருவாகிய சைவ ஆங்கிலப் பாடசாலை – வண்ணார்பண்ணை சைவப்பிரகாச வித்தியாசாலை.
மன்னாரில் எண்ணெய் வள ஆய்வில் ஈடுபட்ட நிறுவனம் – கெய்ன் இந்தியா நிறுவனத்தின் துணை நிறுவனமான கெய்ன் லங்கா.