ஆலையடிவேம்பு பிரதேசசபைக்கு உட்பட்ட இயற்கை அழகு நிறைந்த சின்னமுகத்துவாரம் கடற்கரை பகுதி மருது விளையாட்டு கழகத்தினால் நேற்றய தினம் (05) சிரமதானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த பகுதியில் இயற்கை அழகை சீர்குழைக்கும் வகையில் காணப்பட்ட குப்பைகள், மரப்பற்றைகள் என்பன மருது விளையாட்டுக் கழகத்தினரினால் சிறப்பான முறையில் அகற்றி துப்பரவு செய்யப்பட்டது.
மேலும் மருது விளையாட்டு கழகமானது கடந்த காலங்களில் கல்வி, சமூக சேவைகள் மற்றும் ஏனைய நலன்புரி சேவைகள் என அனைத்திலும் முன்நின்று செயற்பட்டு வருவதனை காணக்கூடியதாகவும் உள்ளது.