அக்கரைப்பற்றினை சேர்ந்த திரு சுந்தரம் சிறிதரன் அவர்கள் திருக்கோவில் கல்வி வலயத்தில் அழகியல் பாடத்திற்கான உதவிக் கல்விப் பணிப்பாளராக பணியாற்றிவந்த நிலையில் இன்று 09 முதல் கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் அழகியல் பாடத்திற்கான உதவிக் கல்விப் பணிப்பாளராக கடமையேற்றார்.
அக்கரைப்பற்றினை பிறப்பிடமாகக் கொண்ட திரு சுந்தரம் சிறிதரன் அவர்கள் உயர் கல்வியை நிறைவு செய்து பட வரை கலைஞர் பயிற்சி நெறியை பூர்த்தி செய்து தொழில் நுட்ப உத்தியோகத்தராக பணியாற்றினார். அதே காலப்பகுதியில் போட்டி பரீட்சை ஒன்றின் மூலம் சித்தி பெற்று 1996 ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் பணியில் உள்நுழைந்தார். பின்னர் 2004 ஆம் ஆண்டு முதல் பகுதி நேர விரிவுரையாளராகவும் 2008 முதல் 2010 வரை அட்டாளைச்சேனை ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் முழுநேர விரிவுரையாளராகவும் கடமையாற்றி அதன் பின்னர் திருக்கோவில் கல்வி வலயத்தில் உதவிக் கல்விப் பணிப்பாளராக பணியாற்றி வந்தநிலையில்.
கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் அழகியல் பாடத்திற்கான உதவிக் கல்விப் பணிப்பாளராக இன்றைய தினம் கடமையேற்ற நிலையில் பல தரப்பினராலும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
இந்நிலையில் திரு சுந்தரம் சிறிதரன் அவர்கள் மென்மேலும் பல பதவி உயர்வுகளைப் பெற்று எதிர்வரும் காலங்களில் எமது சமூகத்திற்கு சிறந்த சேவையாற்ற நாங்களும் எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.