நாட்டின் சில பகுதிகளில் பொலிஸ் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவைமீறிய 97 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
27 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அத்துடன் கம்பஹா மாவட்டத்தின் 18 பொலிஸ் பிரிவுகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தம நிலையில், குறித்த பகுதிகளில் உள்ள சதொச, கூட்டுறவு நிலையம், அரச மருந்தகம், சிறப்பு அங்காடிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை நிலையங்கள் என்பனவற்றை இன்று காலை 8 மணிமுதல் இரவு 8 மணிவரை திறக்கமுடியும எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.