Latest News
Home / ஆலையடிவேம்பு / பொலிவடைந்த கிராமம் எனும் வேலைத்திட்டத்தின் கீழ் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரிவுகளிலும் சிரமதானப்பணிகள்

பொலிவடைந்த கிராமம் எனும் வேலைத்திட்டத்தின் கீழ் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரிவுகளிலும் சிரமதானப்பணிகள்

வி.சுகிதாகுமார், ஜினுஜன்,காபிஷன்

ஜனாதிபதியின் பொலிவடைந்த கிராமம் எனும் வேலைத்திட்டத்தின் கீழ் நாடாளாவிய ரீதியில் சிரமதானப்பணிகள் சமுர்த்தி பிரிவினரால் (01) ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

இதற்கமைவாக அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரிவுகளிலும் சிரமதானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

ஆலைடிவேம்பு பிரதேச செயலாளர் கே.லவநாதனின் வழிகாட்டலில் சமுர்த்தி தலைமைய முகாமையாளர் என்.கிருபாகரன் தலைமையில் 22 கிராம உத்தியோகத்தர் பிரிவிலும் இடம்பெற்ற சிரமதானப்பணிகளில் சமுர்த்தி பயனாளிகள் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச சமூகநலன் அமைப்பு பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

இதன் மூலம் ஆலயங்கள் தொடக்கம் மயானங்கள் வரையிலான பல்வேறு இடங்களும் துப்பரவு செய்யப்பட்டன.

Check Also

ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தின் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம் எதிர்வரும் (04/05/2024) அன்று கோலாகலமாக இடம்பெறும்….

அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகம் நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் பாரம்பரிய சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு விழா நிகழ்வுகள் எதிர்வரும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *