பாகிஸ்தான், கென்யா, பிலிப்பைன்ஸ் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளை பிரித்தானியா சிவப்பு பட்டியலில் சேர்த்துள்ளதுடன், குறித்த நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு பயணத் தடையும் விதித்துள்ளது.
இந்த பயணத் தடையானது, வரும் ஏப்ரல் 9 ம் தேதி காலை 4.00 மணியில் இருந்து அமுலுக்கு வரும் என அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கின்றது.
இதன்படி, இந்த நாடுகளில் இருந்து பிரித்தானியா மற்றும் அயர்லாந்து நாட்டு மக்களை தவிர்த்து பிறர் வருவதற்கு தடை விதிக்கப்படும்.
வரும் 9ம் திகதிக்கு பின்னர் குறித்த நாடுகளில் இருந்து வரும் பிரித்தானிய பிரஜைகள் 10 நாட்கள் கட்டாயம் ஹோட்டல்களில் தங்கியிருக்க வேண்டும் என உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஆபிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் தென் அமெரிக்கா உள்ளிட்ட 30 நாடுகளை சேர்ந்த மக்களுக்கு பிரித்தானியாவிற்குள் நுழைய தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.