உலகளவில் பிரபலமான மொபைல் கேம் விளையாட்டான பப்ஜிக்கு எப்போது இலங்கை, இந்தியா நாடுகளில் மிகப்பெரிய சந்தையாக இருக்கிறது. இந்நிறுவனம் இந்தாண்டில் முதல் ஆறு மாதங்களில் மட்டும் (ஜனவரி-ஜூன்) உலகளவில் 130 கோடி டாலர் வருவாய் ஈட்டியுள்ளது. இதனால், இதுவரை பப்ஜி மொபைல் நிறுவனம் ஒட்டுமொத்தமாக ஈட்டிய வருவாய் 300 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
இதுமட்டுமல்லாமல், உலகளவில் இந்தியாவில் அதகளவில் பப்ஜி டவுன்லொட் செய்யப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் மட்டும் சுமார் 17.5 கோடி பேர் பப்ஜி டவுனோடு செய்துள்ளனர். கொரோனா ஊரடங்கால் மக்கள் வீட்டிலேயே அடைந்து கிடக்கின்றனர். சிறுவர்கள், இளைஞர்களும் வீட்டிலேயே இருப்பதால் பப்ஜி விளையாட்டு மோகம் அதிகரித்துள்ளது.
இதன் விளைவாக, மார்ச் மாதத்தில் மட்டும் 27 கோடி டாலர் வருவாயை பப்ஜி ஈட்டியுள்ளது.
பப்ஜிக்கு அடுத்தபடியாக கடந்த ஆறு மாதங்களில் கரேனா ஃப்ரீ ஃபயர் 30 கோடி டாலர் வருவாய் ஈட்டியுள்ளது. க்னைவ்ஸ் அவுட் 26 கோடி டாலர் வருவாய் ஈட்டியுள்ளது. கால் ஆஃப் டியூட்டி மொபைல் 22 கோடி டாலர் வருவாய் ஈட்டியுள்ளது.