-கிரிசாந் மகாதேவன்-
அக்கரைப்பற்று பனங்காடு பிரதேச வைத்தியசாலையின் புதிய அபிவிருத்தி சங்க உறுப்பினர்களை தெரிவு செய்யும் கூட்டம் பிரதேச சமூக ஆர்வலர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு இன்று (27) காலை 10.00 மணியளவில் இடம்பெற்றது.
பனங்காடு பிரதேச வைத்தியசாலையின் புதிய அபிவிருத்தி சங்கத்தின் செயலாளராக ஓய்வு பெற்ற பொறுப்பு வைத்திய அதிகாரி Dr. சித்ரா தேவி அம்மையார் அவர்களும், புதிய அபிவிருத்தி சங்கத்தின் மேலதிக செயலாளராக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் அவர்களும், சங்கத்தின் பொருளாளராக Dr.குணாளினி அவர்களும்
இவர்களோடு உணவு மருந்து பரிசோதகர் அதிகாரி சாமுவேல் ஜீவராஜா, பனங்காடு பசுபதீஸ்வரர் ஆலய தலைவர் ரகுநாதன் ஐயா, ஆலையடிவேம்பு பிரதேச செயலக சிரேஸ்ட திட்டமிடல் அதிகாரி ரவிச்சந்திரன் மற்றும் கிருஷ்ணா அவர்களும் சங்கத்தின் உறுப்பினர்கள் ஆக தெரிவு செய்யப்பட்டனர்.
சங்கத்தின் ஆலோசகர்களாக பனங்காடு மண்ணின் சட்டத்தரணி கலைவாசன லோகநாதன் அவர்களும், சட்டத்தரணி கோபாலசிங்கம் ஹேமபிரகாஷ் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
மேலும் கடந்த காலங்களில் பனங்காடு பிரதேச வைத்தியசாலைக்காக சிறந்த முறையில் செயற்பட்டு வந்த பழைய அபிவிருத்தி சங்கத்தினர்களுக்கு நன்றிகளும் பாராட்டுக்களும் மக்கள் தெரிவித்து வருகின்றனர் என்பதுடன்.
பனங்காடு பிரதேச வைத்தியசாலையின் புதிய அபிவிருத்தி குழுவாக தெரிவு செய்யப்பட்டுள்ள குழு உறுப்பினர்களுக்கு மக்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
புதிய அபிவிருத்தி சங்கத்தின் செயலாளர் Dr. சித்ரா தேவி
புதிய அபிவிருத்தி சங்கத்தின் மேலதிக செயலாளர் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன்
புதிய அபிவிருத்தி சங்கத்தின் பொருளாளர் Dr.குணாளினி