அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச பிரிவில் பனங்காடு கிராமத்தில் இரு குடும்பங்களுக்கு தலா Rs.350,000/- நிதியில் இலண்டனில் வசிக்கும் திரு.ரி.பாலேந்திரா அவர்களின் நிதி அனுசரணையில் சிவனருள் பவுண்டேசன் அமைப்பினால் அமைக்கப்பட்ட இரு வீடுகள் இன்றையதினம் (05.04.2022) கையளிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் சிவனருள் பவுண்டேசன் தலைவர் கலாநிதி அனுசியா சேனாதிராஜா, செயலாளர் திரு.வே.வாமதேவன், சமூக சேவை செயற்பாட்டாளர் திரு. க.தயாபரன் அவர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.