கொரோனா தொற்றுக்குள்ளான 35 பேர் நேற்று(வெள்ளிக்கிழமை) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மினுவாங்கொடையில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கும், அவர்களுடன் தொடர்புடைய நபர்களுக்குமே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 83 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 523 ஆக அதிகரித்துள்ளார்.
அத்துடன், கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 296 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், ஆயிரத்து 209 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதுடன், கொரோனா தொற்று குறித்த சந்தேகத்தின் அடிப்படையில் 350 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.