தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு அறிவார்ந்த சமூகத்திற்கான வாசிப்பு எனும் தலைப்பில் நூலகத்தின் முக்கியத்துவம் என்பவற்றினை மாணவர்களுக்கிடையில் எடுத்துக்காட்டும் முகமாக அக்கரைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலை நூலகத்திற்கு நூலக வாசங்களை அச்சிட்டு அன்பளிப்பாக வழங்கிய நிகழ்வு இன்று (26/10/2022) புதன்கிழமை காலை 9.30 மணியளவில் பாடசாலை பிரதி அதிபர்களான திரு.C.மதியழகன், திரு.க.ஜயந்தன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
பாடசாலை நூலகத்திற்கு நூலக வாசங்களை அச்சிட்டு அன்பளிப்பாக Thaki shanth.H. Book shop கல்லூரி வீதி அக்கரைப்பற்று, Mrs.கேமகாந்த் உரிமையாளர், Tamilcnn. lk ஊடகத்தின் உறுப்பினர்கள் மற்றும் ஆலையடிவேம்பு selfie saloon Mr. சுஜிவன் ஆகியோர்கள் அக்ரைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ இராம கிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலை நூலகத்திற்க்கு அன்பளிப்பாக வழங்கி வைத்தனர்.
இன் நிகழ்வு நூலக பொறுப்பாளர்களான , திரு.சி.சிறிக்காந்தன், S.A.C.M.றமின், திருமதி.கோ.கிரியாழினி ஆகியோரின் ஏற்பாட்டில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.