நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை மூவாயிரத்து 360ஆக அதிகரித்துள்ளது.
மேலும் பதினொரு பேர் இன்று மாலை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இந்தஅதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வாறு, வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டவர்களில் சென்னையில் இருந்து நாடு திரும்பிய எட்டுப்பேரும், பங்களாதேஷிலிருந்து வந்த இருவரும், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து திரும்பிய ஒருவரும் உள்ளடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் வைரஸ் தொற்றிலிருந்து மூவாயிரத்து 208 பேர் பூரண குணமடைந்துள்ள நிலையில் இன்றும் 139பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
கொரோனா தொற்றினால் இலங்கையில் இதுவரை 13 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.