Latest News
Home / உலகம் / ஜேர்மனியை உலுக்கிய சிறுவர் பாலியல் வன்முறை சம்பவங்கள்- இருவரிற்கு 20 வருட தண்டனை

ஜேர்மனியை உலுக்கிய சிறுவர் பாலியல் வன்முறை சம்பவங்கள்- இருவரிற்கு 20 வருட தண்டனை

ஜேர்மனியில் நூற்றுக்கணக்கான சிறுவர்களை  பாலியல் வன்முறைக்கும் துஸ்பிரயோகத்திற்கும் உட்படுத்திய இருவரிற்கு அந்த நாட்டின் நீதிமன்றம் 20 வருட சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.

1998 முதல் 2008 வரையான காலப்பகுதியில் 450ற்கும் அதிகமானவர்களை பாலியல் துஸ்பிரயோகத்திற்குபடுத்தியதாகவும் 32 பேரை பாலியல் வன்முறைக்குட்படுத்தியதாகவும் குற்றம்சாட்டப்பட்ட அன்ரியாஸ் -மரியோ என்ற பெயர்களால் அழைக்கப்படும் இருவரிற்கே நீதிமன்றம் இந்த தண்டனையை வழங்கியுள்ளது.

ஜேர்மனியின் வடபகுதியில் உள்ள ஹமெலின் என்ற பகுதியில் விடுமுறை முகாமிற்கு சென்ற சிறுவர்களை   இவர்கள் பாலியல் துஸ்பிரயோகம் மற்றும் வன்முறைக்கு உட்படுத்தியுள்ளனர்.

மேலும் இருவரில் ஒருவர் தத்தெடுத்து வளர்த்து வந்த சிறுமியை பார்க்கசென்றவர்களையும் இவர்கள் பாலியல் ரீதியில் சீரழித்துள்ளனர்.

குறிப்பிட்ட சிறுமியையும் துஸ்பிரயோகம் செய்த இவர்கள் அந்த சிறுமி மூலம் ஏனையவர்களை தங்கள் பகுதிக்கு வரச்செய்துள்ளனர்.

இருவரும் சிறுவர்களிற்கு ஆசைவார்த்தை காட்டி துஸ்பிரயோகம் செய்தனர் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். மடிக்கணியை வழங்குவதாகவும் குதிரை சவாரிக்கு ஏற்பாடு செய்வதாகவும் இவர்கள் சிறுவர்களிற்கு தெரிவித்தனர் பின்னர் தங்கள் துஸ்பிரயோக நடவடிக்கைகளை வீடியோவில் பதிவு செய்துகொண்டுள்ளனர்.

இவ்வாறான ஒரு வீடியோவோ இவர்களிற்கு எதிரான முக்கிய ஆதாரமாக மாறியுள்ளது.

சிறுவர்முகாமிற்காக பயன்படுத்தப்படும் வானை தளமாக பயன்படுத்தி அன்ரியாஸ் தனது நடவடிக்கைகளை ஒரு தசாப்தகாலமாக மேற்கொண்டார்  அதனை டார்க்வெப்பில் பதிவு செய்தார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நபர்களால்ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிள்ளைகள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ள விசாரணையாளர்கள் சிறுவர்களிற்கான முகாமிற்கு பலர் வந்து சென்றுள்ளதால் அவர்கள் அனைவரினது பெற்றோர்களையும் தொடர்புகொள்ள முடியாத நிலை காணப்பட்டது எனவும் தெரிவித்துள்ளனர்.

டெமோல்டில் மூடிய கதவுகளின் பின்னால் இடம்பெற்ற விசாரணைகளின் போது பாதிக்கப்பட்டவர்கள் உட்பட 32 பேர் சாட்சியமளித்துள்ளனர்.

இந்த குற்றங்களை  என்னால் வார்த்தைகளால் விபரிக்க முடியாது என நீதிபதி அன்கே குறூடா தெரிவித்துள்ளார்.

மோசமான கொடுரமான வெறுக்கத்தக்க  போன்ற வார்த்தைகள் இந்த குற்றங்களை வர்ணிப்பதற்கு போதுமானவையல்ல எனவும் குறிப்பிட்டுள்ள அவர் குற்றவாளிகளை பார்த்து நீங்கள் உங்கள் பாலியல் பேராசைக்காக 32 பேரை பயன்படுத்தி சீரழித்துள்ளீர்கள் என தெரிவித்துள்ளார்.

Check Also

ஜி20 உச்சி மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆரம்பம்

இந்தியா தலைமையேற்று நடத்தும் 18வது ஜி20 உச்சி மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், இன்று புதுடெல்லியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *