அவுஸ்ரேலியா அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது காயமடைந்த இந்தியக் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கு சிட்னியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது, பெட் கம்மின்ஸ் வீசிய பந்து ஜடேஜாவின் இடது கை பெருவிரலைப் பதம் பார்த்தது. இதன் நிலைமை மோசமடைந்ததால், அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இத்தகவலை டுவிட்டரில் பதிவிட்டுள்ள ஜடேஜா, ‘அறுவை சிகிச்சையால் சிறிது நாளைக்கு விளையாட முடியாது. மீண்டும் பழைய உற்சாகத்துடன் திரும்பி வருவேன்’ என குறிப்பிட்டுள்ளார்.