இளம் சமுகத்தை சீரழிக்கும் போதைப்பொருள் தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடுகள் நாளைய தினம் (03/10/2022) மதியம் 01.30 மணியளவில் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ண மகாவித்தியாலயத்தில் முன்பாக பாடசாலை சமூகத்தினரால் முன்னெடுக்கப்பட இருக்கின்றது.
பிரதேச சமூக நலம் விரும்பிகள், போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக தன்னார்வம் உள்ளவர்கள் என அனைவரும் வருகைதந்து கொடிய போதைப்பொருள் பாவனையை இல்லது ஒழிக்க ஒன்றிணைவோம்.
மேலும் நாளைய தினம் ஆலையடிவேம்பு பிரதேச ஏனைய பாடசாலைகளிலும் போதைப்பொருள் விழிப்புணர்வு செயற்பாடுகள் முன்னெடுக்கவுள்ளதாகவும் அறியக்கூடியதாக உள்ளது.