உழவர்களின் திருநாள் தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான தை திருநாள் பண்டிகை உலக வாழ் இந்துக்களால் விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாக இருந்து வருகின்ற நிலையில் 2024ம் வருடத்தின் தை திருநாள் பண்டிகை கடந்த 15ம் திகதி அனுஷ்டிக்கப்பட்டிருந்தது.
அந்த வகையில் தைப்பொங்கல் விழா வழமை போல் இவ்வருடமும் கோளாவில் ஸ்ரீ அறுத்தநாக்கொட்டீஸ்வரர் கூட்டுப்பிராத்தனை சபையினரின் தலைமையில் கோளாவில் விநாயகர் அறநெறிப்பாடசாலை மாணவர்களை உள்ளடக்கி பல்வேறு கலை கலாசார நிகழ்வுகளுடனும் போட்டிகளுடனும் சிறந்த முறையில் இன்றைய தினம் (21) ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்றது.