Latest News
Home / சுவாரசியம் / கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க ஒரே வழி இதுதான்.. இணையத்தில் வைரலாகும் ட்விட்டர் காட்சி!

கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க ஒரே வழி இதுதான்.. இணையத்தில் வைரலாகும் ட்விட்டர் காட்சி!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் மக்கள் பீதியில் உறைந்திருக்கிறார்கள். சீனாவில் மட்டும் 80 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டும், 3000 ஆயிரம் பேர் இறந்தும், 6000 பேர் சீரியஸ் கட்டத்திலும் இருக்கின்றனர்.மேலும், இந்தியாவில் இதுவரை 29 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சீனாவை சேர்ந்த மக்கள் தங்களது அன்றாட வேலைகளை கூட சரியாக செய்யமுடியாமல் அவதிப்படுவருகின்றனர்.

இந்நிலையில், கொரோனா வைரஸில் இருந்து தப்பிப்பது எப்படி என தான் டிவிட்டரில் கேட்டிருந்ததாகவும், பலரும் பல்வேறு ஐடியாக்களை கூறியிருந்தாலும், இதுதான் தன்னை கவர்ந்த ஐடியா என மஹிந்திரா குரூப் நிறுவனத்தின் சேர்மன் ஆனந்த் மகேந்திரா ட்விட் செய்துள்ளார்.

அதில், தனக்கு என்ன வேண்டும் என ஒரு சீட்டில் எழுதி, அதற்கான பணத்துடன் உரிமையாளர் ஒருவர் நாயிடம் கொடுக்க, அந்த நாய், பொம்மை காரை ஒட்டிக்கொண்டு கடைக்கு சென்று தேவையான பொருட்களை வாங்கி வருகிறது.இப்படி செய்வதால், நாம் வெளியே செல்ல தேவை இல்லை. இதனால் கொரோனா நம்மை தாக்க வாய்ப்பு இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

https://twitter.com/anandmahindra/status/1235405659765534720

 

Check Also

உலக புகழ்பெற்ற வைரங்கள் பற்றி நீங்கள் அறிந்திடாத தகவல்கள்

வேதியியல் ரீதியாக, வைரமானது கார்பன் கனிமத்தின் திட உறுப்பாகும். வைரங்களுக்கு மேற்கத்தேய நாடுகளில் பயன்படுத்தப்படும் சொற்களின் அர்த்தங்கள் பொதுவாக ஒன்றையே …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *