மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை பகுதியில் ஊஞ்சல் துணியில் சிக்கி சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த போது, நேற்று (23) பகல் இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த சிறுவனின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மகிழடித்தீவு பகுதியை சேர்ந்த 9 வயதான சிறுவனே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.