Latest News
Home / ஆலையடிவேம்பு / உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு மகாசக்தி அமைப்பினால் நடாத்தப்பட்ட பாலர் பாடசாலை மாணவர்களுக்கான சிறுவர் தின நிகழ்வு….

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு மகாசக்தி அமைப்பினால் நடாத்தப்பட்ட பாலர் பாடசாலை மாணவர்களுக்கான சிறுவர் தின நிகழ்வு….


உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு மகாசக்தி அமைப்பினால் நடாத்தப்பட்டு வருகின்ற பாலர் பாடசாலை மாணவர்களுக்கான சிறுவர் தின நிகழ்வுகள் இன்று (01/10/2022) சனிக்கிழமை மாலை 03.00 மணியளவில் கோளாவில் பிரதேச பகுதியில் சிறப்பானதாக இடம்பெற்றது.

நிகழ்வில் அதிதிகளாக மகாசக்தி அமைப்பின் தலைவி மங்கையக்கரசி பியசேன, மகாசக்தி அமைப்பின் செயலாளர் திலகராஜன், திருக்கோவில் வலய பிரதிக்கல்வி பணிப்பாளர் திருமதி.மதூர் மயூரன், ஆயுர்வேத வைத்தியர் அமினா மற்றும் முன்பள்ளி பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் என்பவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.

இவ் நிகழ்வில் மகாசக்தி கண்ணகி கிராமம் பாலர் பாடசாலை, மகாசக்தி கிராம எழுச்சி பாலர் பாடசாலை, மகாசக்தி கோளாவில் பாலர் பாடசாலை மற்றும் மகாசக்தி நாவற்காடு பாலர் பாடசாலை மாணவர்கள் பங்குபற்றிய கலை நிகழ்வுகள் மற்றும் சிறுவர்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் பல விளையாட்டு போட்டிகள் என்பன சிறந்த முறையில் குறித்த பாலர் பாடசாலை ஆசிரியர்களால் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த நிகழ்வை பாலர் பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பிரதேச மக்கள் என பலரும் பார்வையிட வந்திருந்தார்கள்.

 

Check Also

ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தின் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம் எதிர்வரும் (04/05/2024) அன்று கோலாகலமாக இடம்பெறும்….

அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகம் நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் பாரம்பரிய சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு விழா நிகழ்வுகள் எதிர்வரும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *