இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி இன்று நடைபெறவுள்ளது.
பாகிஸ்தானின் கராச்சி மைதானத்தில் இலங்கை நேரப்படி மாலை 3.30 மணிக்கு இந்த போட்டி இடம்பெறவுள்ளது.
அத்துடன், குறித்த போட்டி நேற்றைய தினம் நடத்தப்படவிருந்த நிலையில் சீரற்ற வானிலை காரணமாக இன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.
பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பாகிஸ்தானுக்கு சென்றுள்ள இலங்கை அணிக்கு ஜனாதிபதிக்கு நிகரான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.