உடற்தகுதி பரிசோதனையில் நேற்றைய தினம் (12) கலந்துக்கொண்ட இலங்கை கிரிக்கெட் அணியின் 31 வீரர்களில் 4 பேர் இந்த பரிசோதனையில் தெரிவு செய்யப்படவில்லை.
குசல் ஜனித் பெரேரா, தனுஷ்க குணதிலக்க, பானுக ராஜபக்ஷ, தில்ருவன் பெரேரா ஆகிய 4 பேரும் இதில் தெரிவு செய்யப்படாதவர்களாவர்.
குறிப்பிட்ட 4 வீரர்களுக்கும் எதிர்வரும் தினங்களில் மீண்டும் ஒருமுறை உடற்தகுதி பரிசோதனைக்கு சமுகமளிக்குமாறு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த பரிசோதனை கொழும்பு சுகந்ததாச விளையாட்டரங்கில் நடைபெற்றது.