ஆலையடிவேம்பு பிரதேச சின்னப்பனங்காடு கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட புளியம்பத்தைக் கிராமத்தில் கமு/திகோ/கலைவாணி கனிஸ்ட வித்தியாலயம் எனும் பெயரில் புதிய ஆரம்பக் கல்வி பாடசாலை நாளை (04) புதன்கிழமை காலை 09.30 மணியளவில் பாடசாலையின் அதிபர் A.நல்லதம்பி அவர்கள் தலைமையில் அதிதிகள் பங்குபற்றலுடன் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட இருக்கின்றது.
இப் பாடசாலையானது புளியம்பத்தை கிராம மற்றும் அதனை அண்டிய மகாசக்தி கிராம, கவடாப்பிட்டி கிராம ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு ஓர் சிறந்த வரப்பிரசாதமாக அமைய இருக்கின்றது என்பதுவும் குறிப்பிடத்தக்கது.