ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வெளிநாடு சென்ற குடும்பங்களுக்கான நிதி முகாமைத்துவம் தொடர்பான நன்மை மிக்க விழிப்புணர்வு கருத்தரங்கு இன்றைய தினம் (27.01.2024) காலை 9.30 மணியளவில் அக்கரைப்பற்று, இலங்கை வங்கி கிளையின் பூரண அனுசரணை மற்றும் ஏற்பாட்டிலும் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் திரு.வி.பபாகரன் அவர்களின் அவர்களின் வழிகாட்டுதலுடனும், பிரதேச செயலக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரிவு மற்றும் புலம்பெயர் தொழிலாளர் சங்கங்களின் பங்களிப்புடனும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
அக்கரைப்பற்று, இலங்கை வங்கி கிளையின் முகாமையாளர் ம.ஜெயச்சந்திரன் அவர்களின் நெறிப்படுத்தலுடன் உதவி முகாமையாளர் ரி.பிரபாகர் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் அதிதியாக இலங்கை வங்கி பிராந்திய முகாமையாளர் H.G.குமுதினி , இலங்கை வங்கியின் சர்வதேச பிரிவு பொறுப்பாளர் அஜித் நிலங்க மேலும் ஆலையடிவேம்பு பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் சோபிதா, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர் தயாபரன் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர் தேவதர்ஷினி, தொழிலாளர் சங்க பொறுப்பாளர்கள், புலம் பெயர் தொழிலாளர் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.
குறித்த விழிப்புணர்வு கருத்தரங்களில் கலந்து கொண்டவர்களுக்கு பல பெறுமதிமிக்க பரிசுப்பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்தது. மேலும் குறித்த நிகழ்வின் போது ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இலங்கை வங்கி கிளை ஒன்றினை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தை அண்மித்த பகுதியில் திறக்குமாறும் அதனுடாக புலம் பெயர் தொழிலாளர் குடும்பங்கள் உட்பட பொதுமக்கள் அனைவருக்கும் பயனளிக்க கூடியதாக அமையும் என்பதனை தெரிவித்து இலங்கை வங்கியின் உயர் அதிகாரிகளிடம் புலம் பெயர் தொழிலாளர் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்களால் மகஜர் கையளிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.