அம்பாரை மாவட்டத்தில் உள்ள பழம்பெரும் ஆலயங்களில் ஒன்றான அக்கரைப்பற்று பனங்காடு அருள்நிறை மாதுமை உடனுறை ஸ்ரீ பாசுபதேசுவரர் தேவஸ்தான புனராவர்த்தன நவகுண்ட பஷ அஷ்டபந்தன பிரதிஷ்டா மகா கும்பாபிசேக பெரும்சாந்தி குடமுழுக்கு பெருவிழா இம்மாதம் 28ஆம் திகதி காலை 6.00 மணி தொடக்கம் 7.20 மணிவரையுள்ள சுக்கிலபட்சத்து தசமி திதியும் மூல நட்சத்திரமும் அமிர்த சித்தயோகமும் கூடிய சுபமுகூர்த்த வேளையில் இடம்பெற இறைவன் திருவருள் கைகூடியுள்ளது.
மகா கும்பாபிசேக பெரும்சாந்தி குடமுழுக்கு பெருவிழாவின் தொடக்க நிகழ்வுகள் இன்று (24) அதிகாலை 5.30 மணியளவில் கருமாரம்ப கிரியைகளோடு ஆரம்பமாகியது.
மேலும் கும்பாபிசேக பெருவிழாவின் எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வானது
25ஆம் திகதி நண்பகல் 11.55 தொடக்கம் 26 ஆம் திகதி 4.00 மணிவரை இடம்பெறவுள்ளது.
தொடர்ந்து கிரியைகள் இடம்பெறுவதுடன் 28ஆம் திகதி காலை 6.00 மணிமுதல் 7.20 மணிவரையுள்ள சுபமகூர்த்தத்தில் வேதோத்திர பாராயணங்கள் முழுங்க மாதுமை அம்பிகா சமேத ஸ்ரீ பாசுபதேசுவரருக்கும் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் குடமுழுக்கு இடம்பெற்று பெரும்சாந்தி விழா நடைபெறும்.
ஆலய தலைவர் மா.இரகுநாதன் தலைமையில் இடம்பெறும் கும்பாபிசேக கிரியைகள் யாவும் கும்பாபிசே பிரதிஸ்டா பிரதம சிவாச்சாரியார் சிவஸ்ரீ பாலகுகேஸ்வர சிவாச்சாரியார் அவர்களின் தலைமையில் ஆலய பிரதமகுரு வித்தயாசாகரர் சிவஸ்ரீ புண்ணிய கிருஸ்ணகுதாரக்குருக்கள் மற்றும் ஈசான சிவாச்சாரியார் கிரியாதிலகம் சிவஸ்ரீ அ.மூர்த்தீஸ்வரக்குருக்கள் ஆகியோரின் வழிகாட்டலில் நடைபெறவுள்ளது.
இச்சிறப்புமிகு ஆலயத்தில் நடைபெற இருக்கும் கும்பாபிசேக பெருவிழாவில் அனைத்து பக்தர்களும் கலந்து அவனருள் பெற்றேகுமாறு அன்புடன் அழைக்கின்றனர் ஆலய நிருவாகம் உள்ளிட்ட பொதுமக்கள்.