Latest News
Home / ஆலையடிவேம்பு / ஆலையடிவேம்பு பிரதேச டயகோணியா முன்பள்ளி பாடசாலை வீதியின் நிலையும்:பிரதேசவாழ் மக்கள் கோரிக்கையும்….

ஆலையடிவேம்பு பிரதேச டயகோணியா முன்பள்ளி பாடசாலை வீதியின் நிலையும்:பிரதேசவாழ் மக்கள் கோரிக்கையும்….

M. கிரிசாந்

ஆலையடிவேம்பு பிரதேசம், அக்கரைப்பற்று 7/4 பிரிவு டயகோணியா முன்பள்ளி பாடசாலை வீதி மோசமாக சேதமடைந்துள்ளமையால் அவ்வீதியுடான மக்களின் போக்குவரத்து பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

மிக நீண்ட காலமாக புனரமைப்பு எதுவும் இன்றி காணப்படும் இவ் வீதியை மழைகாலத்தில் வெள்ளம் முழுமையாக மூடி இவ் வீதியில் தேங்கி நிற்பதனால் வீதி சேதமடைந்து மோசமான நிலையில் காணப்படுகின்றது.

தற்போதும் இவ் குறித்த வீதியின் நீர் தேங்கி நிற்பதனால் வீதியில் பயணிப்போர் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

பல குடும்பங்கள் வசித்து வரும் இவ் வீதியில் வெள்ள நீர் வடிந்தோடுவதற்கு முறையான வடிகான் தொகுதி இல்லாமல் இருப்பதனால் சிறு மழை பெய்ந்தால் கூட நீர் வீதிகளில் தேங்கி நிற்பதால் மக்கள் பெரிதும் பல வருடங்களாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

எனவே இவ் வீதியினை மீள் புனரமைப்பு செய்து தருமாறும் மற்றும் இப் பகுதிக்கான முறையான வடிகான் கட்டமைப்பு தொகுதியினை அமைத்து தருமாறும் பிரதேசவாழ் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மேலும் குறித்த விடயத்தினை உரிய தரப்பினர் கவனத்தில் கொண்டு துரித நடவடிக்கை எடுத்து, மக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்துமாறும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Check Also

ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தின் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம் எதிர்வரும் (04/05/2024) அன்று கோலாகலமாக இடம்பெறும்….

அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகம் நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் பாரம்பரிய சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு விழா நிகழ்வுகள் எதிர்வரும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *