Latest News
Home / ஆலையடிவேம்பு / ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் கலைவாணி விழா:கொரோனா கொள்ளை நோய் நாட்டிலிருந்து அகல விசேட பிரார்த்தனை…

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் கலைவாணி விழா:கொரோனா கொள்ளை நோய் நாட்டிலிருந்து அகல விசேட பிரார்த்தனை…

வி.சுகிர்தகுமார்  

  ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் கலைவாணி விழாவின்போது கொரோனா கொள்ளை நோய் நாட்டிலிருந்து அகல வேண்டும் எனவும் அரசாங்கத்திற்கும் நாட்டு மக்களுக்கும் நலன் வேண்டிய விசேட பிரார்த்தனை வழிபாடுகள் இடம்பெற்றன.

சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நேற்று  (25)  பிரதேச செயலகக் கலாசார மண்டபத்தில் பிரதேச செயலாளர் விநாசித்தம்பி பபாகரன் தலைமையில் சிறப்பாக இடம்பெற்ற வாணி விழா பூஜை வாழிபாடுகளின் போதே இவ்வாறு பிரார்த்தனை வழிபாடுகள் நடைபெற்றது.

கணக்காளர் க.பிரகாஸ்பதி தலைமையிலான குழுவினரின் சிறப்பு பஜனையுடன் ஆரம்பமான கலைவாணி விழா நிகழ்வுகளின் சிறப்புப் பூஜைகளை அக்கரைப்பற்று அருள்மிகு மருதடி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ முத்து தேவமனோகரக் குருக்களும் ஆலையடிவேம்பு பிரதேச செயலக அருள்மிகு மஹா கணபதி ஆலய குரு சிவஸ்ரீ பிருந்துஜன் சர்மாவும் இணைந்து நடாத்திவைத்தனர்.

நாட்டின் அசாதாரண சூழ்நிலையினை கருத்திற்கொண்டு மிகவும் எளிமையான முறையில் இடம்பெற்ற வாணிவிழாவில் உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர் உள்ளிட்ட மட்டுப்படுத்தப்பட்ட உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

பூஜை வழிபாடுகளின் போது நாட்டு மக்கள் அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் எனவும் கொரோனா எனும் கொடிய கொள்ளை நோய் நாட்டிலிருந்து அகல வேண்டும் எனவும் பிரார்த்தனைகள் இடம்பெற்றன.

Check Also

ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தின் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம் எதிர்வரும் (04/05/2024) அன்று கோலாகலமாக இடம்பெறும்….

அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகம் நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் பாரம்பரிய சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு விழா நிகழ்வுகள் எதிர்வரும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *