ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் சமூர்த்தி பிரிவினால் பிரதேச செயலாளர் திரு. வி.பபாகரன் அவர்களின் பணிப்புரைக்கமைவாக சமுர்த்தி லொத்தர் வீடமைப்பு வேலைத் திட்டத்திற்கான காசோலை வழங்கும் நிகழ்வு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர், சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.
வறுமை நிலையினை அடிப்படையாகக் கொண்ட சமூர்த்தி பயனாளிகளுக்கான சமுர்த்தி லொத்தர் வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் அளிக்கம்பை கிராமசேவகர் பிரிவில் உள்ள பயனாளி ஒருவரும் மற்றும் சின்ன முகத்துவாரம் கிராம சேவகர் பிரிவிலுள்ள பயனாளி ஒருவருமாக 02 பயனாளிகளுக்கான காசோலைகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
நன்றி: Divisional Secretariat, Alayadivembu முகநூல் பக்கம்