உழவர்களின் திருநாள் தை திருநாள் பண்டிகை உலக வாழ் இந்துக்களால் விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாக இருந்து வருகின்ற நிலையில் 2024ம் வருடத்தின் தை திருநாள் பண்டிகை கடந்த 15ம் திகதி அனுஷ்டிக்கப்பட்டிருந்தது.
அந்த வகையில் 2024ஆம் வருடத்திற்கான பொங்கல் விழா ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தில் இன்று (16/01/2024) காலை 10.30 மணியளவில் ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்ற தலைவர் திரு.பெ.தணிகாசலம் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.
மேலும் நிகழ்வில் இந்துமாமன்றத்தின் பொருளாளர், உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டதுடன் பொங்கல் பூசை நிகழ்வுகள் பக்தி பூர்வமாக இடம்பெற்று.