ஆலையடிவேம்பு பிரதேச அக்கரைப்பற்று சாகாம வீதியில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் முன்பாக இன்று (02/11) திங்கள்கிழமை மாலை 6.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் கணவருடன் சென்ற பெண்ணின் தாலியினை பறிக்க முற்பட்டபோது விபத்து நடைபெற்றுள்ளது.
குறித்த விபத்தானது தாலியினை பறிக்க முற்பட்டபோது அதனை தடுக்க முயன்ற சம்பவத்தில் கணவன் மனைவி பிள்ளை உட்பட கொடியினை பறிக்க முயற்சித்தவர்களும் எதிரே பயணித்த நபரும் விபத்துக்குள்ளாகி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த விபத்தில் மூன்று மோட்டார் சைக்கிளும் கார் ஒன்றும் சேதம் அடைந்ததுடன் மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொள்கின்றனர்.