Latest News
Home / ஆலையடிவேம்பு / ஆலையடிவேம்பு பிரதேசத்தில் கணவருடன் சென்ற பெண்ணின் தாலியினை பறிக்க முயற்சி: விபத்தில் சிக்கிய திருடர்கள் உற்பட பலர்!

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் கணவருடன் சென்ற பெண்ணின் தாலியினை பறிக்க முயற்சி: விபத்தில் சிக்கிய திருடர்கள் உற்பட பலர்!

ஆலையடிவேம்பு பிரதேச அக்கரைப்பற்று சாகாம வீதியில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் முன்பாக இன்று (02/11) திங்கள்கிழமை மாலை 6.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் கணவருடன் சென்ற பெண்ணின் தாலியினை பறிக்க முற்பட்டபோது விபத்து நடைபெற்றுள்ளது.

குறித்த விபத்தானது தாலியினை பறிக்க முற்பட்டபோது அதனை தடுக்க முயன்ற சம்பவத்தில் கணவன் மனைவி பிள்ளை உட்பட கொடியினை பறிக்க முயற்சித்தவர்களும் எதிரே பயணித்த நபரும் விபத்துக்குள்ளாகி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த விபத்தில் மூன்று மோட்டார் சைக்கிளும் கார் ஒன்றும் சேதம் அடைந்ததுடன் மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொள்கின்றனர்.

Check Also

ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தின் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம் எதிர்வரும் (04/05/2024) அன்று கோலாகலமாக இடம்பெறும்….

அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகம் நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் பாரம்பரிய சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு விழா நிகழ்வுகள் எதிர்வரும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *