ஆலையடிவேம்பு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டு சத்ய சாயி சேவா நிலையத்தில் இன்றைய தினம் (07) காலை 08.30 மணியளவில் இருந்து சிறந்த முறையில் பிரதேச பல கொடையாளர்களின் வருகையுடன் இடம்பெற்றது.
இரத்த தானம் செய்தால் ஏற்படும் நன்மைகள்.
1. புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு குறைவடையும்.
2. இலவசமாக குருதிப் பரிசோதனை செய்யப்பட்டு நோய்நிலைமைகள் அறியத்தரப்படுவதனால் பல நோய்களை முன்கூட்டியே தடுக்கலாம்.
3. உடலின் மேலதிக கலோரிகள் குறைவடையும்.
4. இதயம் மற்றும் ஏனைய அங்கங்களின் நோய் ஏற்படும் வாய்ப்பு குறைவடையும்.
5. மன அழுத்தம் குறைவடையும்.
6. நீங்கள் வழங்கும் இரத்தம் ஓர் நாள் உங்களுக்கோ உங்கள் அன்புக்குரியவர்களுக்கோ பயன்படலாம். அத்தோடு உங்களால் 4 உயிர்களைக் காப்பாற்ற முடியும்.