ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப்பெருவிழாவின் இந்த வருடத்திற்கான சுபகிருது வருட ஆவணி பௌர்ணமி பிரமோற்சவப்பெருவிழா நேற்று (30.08.2022) மாலை பூர்வாங்கக் கிரியையுடன் ஆரம்பமாகியது.
இன்று (31.08.2022) காலை 10.30 மணிக்கு திருக்கொடியேற்றப் பெருவிழா திரு.வே.சிவசம்பு வட்டவிதானை குடும்பத்தினர் பங்களிப்புடன் சிவ ஸ்ரீ.ஸ்கந்த.வரதேஸ்வரக் குருக்கள் தலைமையில் ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ யோ.கு.சுமிதகணபதி ஐயர் என்பவர்களால் முதலாம் நாள் திருவிழாவின் காலை நிகழ்வுகள் இனிதே நடைபெற்று நிறைவடைந்தது.