Latest News
Home / ஆலையடிவேம்பு / அமரர்.சறோஜா கணேசபிள்ளை 30வது வருட ஞாபகார்த்த மாபெரும் மென்பந்து கிரிகட் சுற்றுப் போட்டியின் கோளாவில் காந்தி விளையாட்டு கழகத்திற்கு வெற்றி!

அமரர்.சறோஜா கணேசபிள்ளை 30வது வருட ஞாபகார்த்த மாபெரும் மென்பந்து கிரிகட் சுற்றுப் போட்டியின் கோளாவில் காந்தி விளையாட்டு கழகத்திற்கு வெற்றி!

ஆலையடிவேம்பு பிரதேச, கோளாவில் காந்தி விளையாட்டு கழகம் நடாத்த்திய அமரர்.சறோஜா கணேசபிள்ளை அவர்களின் 30வது வருட ஞாபகார்த்த மாபெரும் மென்பந்து கிரிகட் சுற்றுப் போட்டி (29.04.2023) சனிக்கிழமை கோளாவில், தியாயப்பர் பாலாத்தை பொது விளையாட்டு மைதானத்தில் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்று வந்தநிலையில்.

குறித்த போட்டியின் இறுதிப் போட்டி இன்றைய தினம் (14/05/2023) மாலை 4.00 மணியளவில் கோளாவில் தியாயப்பர் பாலாத்தை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இப் போட்டியில் கோளாவில் காந்தி விளையாட்டு கழகத்தை எதிர்த்து திருக்கோவில் குட்நிக் விளையாட்டு கழகம் விளையாடி இருந்த நிலையில்.

கோளாவில் காந்தி விளையாட்டு கழகம் துடுப்பெடுத்தாடி 08 ஓவர்களில் 88 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்கள் அதனை எதிர்த்து துடுப்பெடுத்தாடிய திருக்கோவில் குட்நிக் விளையாட்டு கழகம் 08 ஓவர்கள் நிறைவில் 80 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.

அந்த வகையில் 32 அணிகள் பங்கு பற்றிய சுற்றுத்தொடரில் கோளாவில், காந்தி விளையாட்டு கழகம் வெற்றிவாகை சூடியது.

வெற்றி பெற்ற அணிக்கு 20,000/- ரூபா பணப்பரிசும் மற்றும் வெற்றிக்கிண்ணம் என்பன வழங்கப்பட்டதுடன் , இரண்டாம் இடத்தை பெற்ற அணிக்கு 15,000/- ரூபா பணப்பரிசும் வெற்றிக்கிண்ணமும் வழங்கப்பட்டது.

Check Also

ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தின் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம் எதிர்வரும் (04/05/2024) அன்று கோலாகலமாக இடம்பெறும்….

அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகம் நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் பாரம்பரிய சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு விழா நிகழ்வுகள் எதிர்வரும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *