Latest News
Home / இலங்கை / அனைத்து சவால்களையும் முறியடித்தே தீருவோம்- அமெரிக்கத் தூதுவருடனான சந்திப்பில் பிரதமர் தெரிவிப்பு!

அனைத்து சவால்களையும் முறியடித்தே தீருவோம்- அமெரிக்கத் தூதுவருடனான சந்திப்பில் பிரதமர் தெரிவிப்பு!

தமது ஆட்சியில் இலங்கை எத்தகைய சவால்களை எதிர்கொண்டாலும் அனைத்தையும் முறியடித்தே தீருவோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் நேற்று சந்தித்துப் பேச்சு நடத்தினார். இதன்போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

சர்வதேச ரீதியான சவால், உள்நாட்டு அரசியல் சவால், கொரோனா வைரஸ் பெருந்தொற்று சவால், பொருளாதார ரீதியான சவால் என்று பல சவால்கள் இலங்கையைச் சூழ்ந்துள்ளன.

எனவே, அனைத்துச் சவால்களையும் முறியடித்து நாட்டு மக்களுடன் இணைந்து பயணிப்பதில் அரசாங்கம் உறுதியாகவுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அமெரிக்கா – இலங்கைக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக இதன்போது பேசப்பட்டுள்ளது

Check Also

பட்டிருப்பு வலய பாடசாலைக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய இணைந்த கரங்கள் அமைப்பு…

இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள வக்கியெல்லை மட் /பட் /விளாந்தோட்டம் அரசினர் தமிழ் கலவன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *